புதன், 4 மார்ச், 2015

நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் அதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தப்படும்...!!

நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தப்படும் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

ஏப்ரல் மாதம் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

தேர்தலில் வெற்றியீட்டி 100 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைப்பதாகவே அரசாங்கம் முன்னதாக தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது.

100 நாள் திட்டம் வெற்றியீட்டினாலும் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.


அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் மக்களினால் உணரக் கூடிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக