வியாழன், 26 பிப்ரவரி, 2015

சாவகச்சேரியில் குண்டு வெடிப்பு பாதிப்பு எதுவுமில்லை...!!

சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சங்கத்தானை ரயில் நிலையம் முன்பாக உள்ள காணியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த காணியை இன்று அதன் உரிமையாளர்கள் துப்புரவாக்கி குப்பைகளுக்கு நெருப்பு வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதன்போதே குண்டு வெடித்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.


எனினும் எவ்வகையான குண்டு வெடித்தது என உறுதியாகவில்லை எனத் தெரிவித்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக