
தமிழ் தேசிய கூட்டமைப்பு மார்ச் மாதம் ஜெனீவா சென்று அதற்கான அழுத்தங்களை கொடுப்பதுடன், குறித்த இலங்கை மீதான சர்வதேச விசாரணையினை முன்வைத்த நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி அறிக்கையினை திட்டமிட்டவாறு வெளியிடுவதற்கான அழுத்தங்களை கொடுங்கும் எனவும் கூறியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.ஊடகவியலாளர்களுடன் கருத்துப் பகிர்கையிலேயே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளருக்கும், அமெரிக்காவுக்கும் குறித்த அறிக்கையினை உரிய காலத்தில் வெளியிடுமாறு கோரி நாம் கடிதம் அனுப்பியுள்ளோம்.
அந்தவகையில் நாம் சர்வதேச விசாரணை அறிக்கையினை உரிய காலத்தில் வெளிட வேண்டும் எனகோருவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு அழுத்தம் கொடுப்பதுடன், அதற்கு முன்னதாக குறித்த சர்வதேச விசாரணை தீர்மானத்தை முன் வைத்த நாடுகளுடன் பேச்சு நடத்தவும் தீர்மானித்துள்ளதாக கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக