வெள்ளி, 2 மே, 2014

குருநாகல் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு!!!

குருநாகல் – பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு, 25,000 ரூபா நஸ்டஈடு வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி ரயில்வே திணைக்களத்தின் ஊடாக குறித்த நிதி வழங்கப்படவுள்ளதாக ரயில்வே வர்த்தக அதிகாரி ஜீ.டப்ளியூ.எஸ்.சிசிரகுமார குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30ம் திகதி (ஏப்ரல் 30) குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக