திங்கள், 23 பிப்ரவரி, 2015

பெரும்பான்மை பலம் இருந்தால் அரசாங்கத்தை தோற்கடிக்கவும் பிரதமர்..!!!!

பெரும்பான்மை பலம் இருந்தால் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்கவும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
பெரும்பான்மை பலம் இருக்குமென்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடித்து காண்பிக்கட்டும்.

நுகேகொடையில் கூட்டமொன்றை நடத்தி பெரும்பான்மை பலமிருப்பதாக பிரச்சாரம் செய்வதில் அர்த்தமில்லை.

மஹிந்த ராஜபக்சவின் தோல்வியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரம் இழக்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.


வார இறுதியில் குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக்களில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக