செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

மின்னஞ்சல் ஊடான நிதிக் கொடுக்கல் வாங்கல் செய்வோருக்கு எச்சரிக்கை...!!!

மின்னஞ்சல் ஊடாக நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது கூடிய எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என கணிணி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்னஞ்சல் ஊடாக பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும் போது போலியான மற்றும் மோசடியான நிதி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தமது பிரிவினருக்கும் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக