
நேற்று இடம்பெற்ற வடமாகாணத்தின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்கூட்டத்துக்கு பொது நிர்வாக அமைச்சர் கரு ஜெயசூரிய தலைமை தாங்கினார்.
இதன்போது கருத்துரைத்த விக்னேஸ்வரன், போரினால் நிரந்தர காயங்களுக்கு உள்ளான 20000 பேர் வரை வடமாகாணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் போரினால் பல சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இந்த விடயங்களை கவனிக்காமல் இருந்து விட்டது என்றும் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஆளுநர் சந்திரசிறி தமது தனி ஆட்சியை வடக்கில் மேற்கொண்டு வந்தார்.
இதன்போது அவர் தமக்கு தேவையான அதிகாரிகளை கொண்டு செயலாற்றி வந்தார் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் 13வது அரசியலமைப்பின் கீழ் வடமாகாணத்துக்கான ஆட்சியை மாகாணசபைக்கு கையளிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன், கருஜெயசூரியவிடம் கோரிக்கை விடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக