ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகியோர் அக்கட்சிக்கு எதிராக வழக்கு..!!

அரசாங்கத்தில் இருந்து எதிரணிக்கு மாறிச் சென்றவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களின் உறுப்புரிமை நீக்கப்படும் என்று கட்சியின் நடைமுறை செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த வழக்கு தாக்கல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்றோர் சட்ட ஆலோசனை குழு ஒன்றை அமைத்துள்ளனர்.


இதில், மைத்திரிபால சிறிசேன, வசந்த சேனாநாயக்க, எம் கே டி எஸ் குணவர்த்தன,  துமிந்த திஸாநாயக்க, ஹிருணிகா பிரேமசந்திர உட்பட்டோர் அடங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக