செவ்வாய், 23 டிசம்பர், 2014

மஹிந்தவின் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது..!!!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகும் நிலையில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

எனவே அரசாங்க கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே அஞ்சல் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கவுள்ளனர்.

இந்த விஞ்ஞாபனம் இன்று முற்பகல் 9 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் வைத்து வெளியிடப்படவுள்ளது.

ஏற்கனவே இந்த விஞ்ஞாபனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26ம் திகதியே வெளியிடப்படும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.


இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவின் விஞ்ஞாபனம் கடந்த 19ம் திகதியன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக