இலங்கை பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் எவ்விதமான நிதியும் வழங்கப்படாத நிலையில் வடமாகாணத்தின் 5மாவட்டங்கள் தவிர்ந்த மற்றய 20மாவட்டங்களுக்கும் 1002மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டிருக்கின்றது.
மேற்படி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆண்டுக்கான செயற்றிட்ட அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையின் 25 மாவட்டங்களில் 20மாவட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளத என்ற தகவல் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆனால் வடக்கின் 5மாவட்டங்களுக்கும், எவ்விதமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக முன்னதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கிராமங்களுக்கு 10மில்லியன் ரூபா வழங்கும் செயற்றிட்டத்திலும் வடமாகாணம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது. குறிப்பாக இந்தச்செயற்றிட்டத்தில் பிரதேச சபைகளே நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் வடக்கின் பெரும்பாலான பிரதேச சபைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உள்ள நிலையில் அவர்களை மீறிக்கொண்டு ஈ.பி.டி.பியினர் குறித்த நிதிக்கான செயற்றிட்டங்களை கோரியிருந்தன. ஆனால் அதனை அவ்வாறு செய்ய முடியாது என கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய நிலையில் அந்த நிதி முழுமையாக, வடக்கிற்கு
நிறுத்தப்பட்டு மற்றய மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பாடசாலைகள் அபிவிருத்தி மற்றும் பிற அபிவிருத்தி செயற்றிட்டங்களிலும் பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் வடமாகாணம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்த அறிக்கையின் மூலம் தெரியவருகின்றது.
மேற்படி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆண்டுக்கான செயற்றிட்ட அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையின் 25 மாவட்டங்களில் 20மாவட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளத என்ற தகவல் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆனால் வடக்கின் 5மாவட்டங்களுக்கும், எவ்விதமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக முன்னதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கிராமங்களுக்கு 10மில்லியன் ரூபா வழங்கும் செயற்றிட்டத்திலும் வடமாகாணம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது. குறிப்பாக இந்தச்செயற்றிட்டத்தில் பிரதேச சபைகளே நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் வடக்கின் பெரும்பாலான பிரதேச சபைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உள்ள நிலையில் அவர்களை மீறிக்கொண்டு ஈ.பி.டி.பியினர் குறித்த நிதிக்கான செயற்றிட்டங்களை கோரியிருந்தன. ஆனால் அதனை அவ்வாறு செய்ய முடியாது என கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய நிலையில் அந்த நிதி முழுமையாக, வடக்கிற்கு
நிறுத்தப்பட்டு மற்றய மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பாடசாலைகள் அபிவிருத்தி மற்றும் பிற அபிவிருத்தி செயற்றிட்டங்களிலும் பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் வடமாகாணம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்த அறிக்கையின் மூலம் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக