ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை இனச் சாயம் கொண்டு பார்க்க வேண்டாம்..!!!

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள தனி நிருவாக மாவட்டக் கோரிக்கையை இனப்பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யு. டி.ஜே. செனவிரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த கோரிக்கை குறித்து இன்று பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்முனைப் பிரதேசத்துக்கு தனி நிருவாக மாவட்டம் கேட்பதற்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை காண முடிகின்றது. இதில் உண்மையும் இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்துக்கு வந்து தமது கருமங்களை சிங்களத்தில் செய்து கொள்வதில் பிரச்சினைகள் இருக்கின்றன.



இதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.

இதற்கு நிருவாக ரீதியில் தீர்வு காண வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமும் ஆகும்.

இந்தக் கோரிக்கையை இனச் சாயம் கொண்டு பார்க்க முற்பட கூடாது. இந்த நாட்டைக் கூறு போடவும் எத்தனிக்கக் கூடாது.

இன்னும் இந்த நாட்டில் பல்வேறுபட்ட மக்கள் வாழும் பிரதேசங்கள் உள்ளன எனவும் அமைச்சர் செனவிரத்ன மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக