வெள்ளி, 7 நவம்பர், 2014

சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுத முயன்ற மாணவி கைது..!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவியொருவர் சிகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுத முயன்றபோது, சிகிரிய தொல்பொருள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயர்தரம் கற்கும் மாணவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவி, சிகிரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதால் விசாரணை முடியும்வரை அவருடன் சுற்றுலா சென்ற சக மாணவர்களும் சிகிரியா பகுதியில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவிக்கு பொலிஸ் பிணை பெற்றுக் கொடுக்க அரசியல்வாதிகள் முன்வந்தபோதும் அது பலனளிக்கவில்லை என தெரியவருகிறது.

மாணவி இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவத்தால் சுற்றுலா சென்ற மாணவர்களும் ஆசிரியர்களும் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிரியாவில் ஒருநாள் தங்க நேரிட்டதால் அதற்கான செலவு மற்றும் வாகன செலவு போன்றவை திட்டமிட்ட தொகையைவிட அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக