வெள்ளி, 7 நவம்பர், 2014

தெற்காசியாவில் அதிகம் சம்பளம் வழங்கும் தொழில்துறை! ரணிலின் பொருளாதார திட்டம்..!!

தெற்காசியாவில் அதிகம் சம்பளத்தை வழங்கும் பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக இளைஞர் முன்னணியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தெற்காசியாவில் அதிகளவில் சம்பளத்தை வழங்கும் போட்டியுடன் கூடிய தொழில்துறை மற்றும் சேவை இலங்கையில் ஏற்படுத்த எண்ணியுள்ளேன்.

அதிகளவில் சம்பளத்துடன் கூடிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தனது எனவும் இலங்கையின் உற்பத்திகள் உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கிராமிய பொருளாரத்திற்கும் உயிரூட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக