வெள்ளி, 7 நவம்பர், 2014

ஆங்கிலேயர் கால நாணங்களை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது..!!

பெருந்தொகையான ஆங்கிலேயர் கால நாணயங்களை விற்பனை செய்ய முயன்ற இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியவில் நடைபெற்றுள்ளது.

தொல்பொருள் மதிப்புள்ள ஆங்கிலேயர் காலத்து வீ.ஓ.சி. நாணயங்கள் 498 ஐ விற்பனை செய்வதற்கு இரண்டு நபர்கள் முயற்சிப்பதாக பொலிசாருக்குத தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த இரண்டுபேரையும் கைது செய்த பொலிசார் குளியாப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், அவர்களிடமிருந்த பழங்கால நாணயங்களை பறிமுதல் செய்து திறைசேரியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார்.


மேலும் குறித்த நாணயங்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தன? எங்கிருந்தாவது திருடினார்களா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக