திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தப்போகிறதாம் பொதுபலசேனா!!

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான தேசிய கட்சிகள் சிங்கள மக்களுக்கு ஆதரவான வேட்பாளர் ஒருவரை நிறுத்தாவிட்டால் தாம் அவ்வாறான வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டி வரும். இவ்வாறு தெரிவித்துள்ளது பொதுபல சேனா. பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சிங்கள பௌத்த கொள்கைகளை அடிப்படையாக வைத்து ஆவணமொன்றைத்
தயாரித்து, அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடமும், எதிர்கட்சி தலைவரிடமும் கையளிக்கப்போகின்றார் என்றும் அதனை அவர்கள் நிராகாரிக்கும் பட்சத்தில் தமது அமைப்பு வேறொரு வேட்பாளரை நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக