இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற இலங்கை மீனவர்கள் 16 பேர் இன்று விடுதலை செய்யப்படுவர் என கடற்றொழில் அமைச்சின் பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதாகி கேரள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கை
மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இந்தியா இன்றைய தினம் தனது 68 ஆவது சுததந்திர தினத்தைக் கொண்டாடுகின்றது. இதையொட்டி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 94 இந்திய மீனவர்கள் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்தே 16 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். - என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக