வியாழன், 10 ஜூலை, 2014

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்ற சரஸ்வதி சிலை திறந்து விழா!!(படங்கள் இணைப்பு)

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவன் திரு பூ.இந்திரன் அவர்களின் பூரண பங்களிப்பில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழா இன்று (10/07)  கல்லூரி முதல்வர் திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சரஸ்வதி சிலை திரு பூ.இந்திரன் அவர்களின் தாயார் திருமதி பூபாலபிள்ளை சரஸ்வதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வவுனியா வடக்கு வலய வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி பராசக்தி கணேசலிங்கம் , முன்னாள் வவுனியா பிரதேச செயலார் திரு .ஐயம்பிள்ளை, மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக