திங்கள், 29 மார்ச், 2010

வன்னியில் இருந்து 100கிலோகிறாம் எடைகொண்ட வெடிபொருட்கள் மீட்பு..!

வன்னிப் பிரதேசத்திலிருந்து 100கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அப்பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கiயின்போதே நேற்றையதினம் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 80 கிலோ கிறாம் எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் ரக வெடிமருந்தும், 20 கிலோகிறாம் எடையுள்ள சி 4 ரக வெடிமருந்துகளையும் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக