வியாழன், 19 ஜூன், 2014

முஸ்லிம்களை தனிநாடு கோரத்தூண்டும் மதவாத செயல்கள் ஒழிக்கப்படவேண்டும்....!!!

சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடை யிலான ஒற்றுமையைக் குழப்பி வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களை அழிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். முஸ்லிம் மக்களுக்கு என தனிநாடு கோருவதற்கு இவர்கள் தூண்டுதல் வழங்குகின்றனரா. இந்தப் பிரச்சினைக்கு சகலரும் இணைந்துதீர்வு காணவேண்டும் என்றார்.

பிளவுகளை எற்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்த சில குழுக்கள் முயற்சிப்பதாகவும், சகல தரப்பினரும் இணைந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டு மெனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

ஐ.நா விசாரணைக்கு இட மளிக்கக் கூடாதென வலியுறுத்தி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் பயங்கரவாதம் தமிழ் மக்களை அழித்து கோவில்களையும் நாசப்படுத்தி முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும் அழித்த வரலாற்றை நாம் மறக்கவில்லை.


அது போல பெளத்த விகாரைகளை உடைத்து பிக்குமாரையும் கொலை செய்தது. இந்தப் பயங்கரவாதம் அழிந்த வரலாற்றை நாம் நேரில் கண்டோம். ஜனாதிபதி யுத்தத்திற்கு முடிவு கண்டு நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.

சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. பொதுபல சேனா நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. இதன் துண்டுதலால் அளுத்கமவில் முஸ்லிம் வீடுகள், கடைகள் உடைக்கப்பட்டு அந்த மக்களின் பொருளாதாரம் நாசப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக