புதன், 18 ஜூன், 2014

ஐ.நா விசாரணைக் குழுவை அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானம் 134 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!!

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்த வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானம் 134 வாக்குகளால் நிறைவேற்றியது.10 வாக்குகள் எதிராகப் பதிவு
செய்யப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் விவாதத்தை புறக்கணித்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக