வியாழன், 22 மே, 2014

போதைப்பொருள் வர்த்தகர் கைது....!!!!!

மாலைதீவைச் சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகரான இப்ராஹிம் ஷபாஸ் அப்துல் ரஷாக் என்றழைக்கப்படும் 'ஷபா' இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என மாலைத்தீவு செய்தி தெரிவிக்கின்றது. மாலைதீவு நீதிமன்ற அனுமதியுடன் கடந்த பெப்ரவரி மாதம் சிகிச்சைக்காக இலங்கைக்கு வந்திருந்த அவர், நாடு திரும்பாததையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அந்தச் செய்தியில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரும் மாலைதீவு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர், சிகிச்சைபெற்றுவந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக