வியாழன், 22 மே, 2014

தனது பிறப்பு கோளாறை காரணம் காட்டி மரண தண்டனையில் தப்பிய கைதி.....!!!

தனது பிறப்பு கோளாறு காரணமாக அமெரிக்காவில் கைதி ஒருவரது மரண தண்டனை கடைசி நேரத்தில் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

மிசுரி மாநிலத்தில் நேற்று விச ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற் றப்படவிருந்த 46 வயது ரஸ்ஸல் பக் லோவின் மரண தண்டனையை அமெ ரிக்க உச்ச நீமன்ற நீதிபதி சமுவேல் அலிடோ நிறுத்திவைக்க உத்தரவிட்டார். பக்லோ கடந்த 1996 ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியுடன் வாழ்ந்த நபரை கொன்றது மற்றும் காதலியை கடத்தி கற்பழித்த குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவராவார்.


பிறப்பு கோளாறு காரணமாக தனது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதாக வாதிடும் பக்லோ தன் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது அதிக வேதனை அளிப்பதாக இருக்கும் என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்;.

அமெரிக்க அரசியலமைப்பில் தடுக்கப் பட்டிருக்கும் கொ^ரமான மற்றும் அசாதாரண தண்டனையாக தன் மீதான தண்டனை அமையும் என்று அந்த மரண தண்டனை கைதி வாதாடி யுள்ளார். இந்நிலையில் பக்லோவுக்கு விச ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற ஒருசில மணிநேரங்களே இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை மாலை அவரது மரண தண்டனை நிறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக