வியாழன், 22 மே, 2014

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க அரசாங்கம் விரும்பவில்லை...!!!!

போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்க அரசாங்கம் விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் உத்தியோகப் பற்றற்ற ரீதியில் ஆதரவளித்துள்ளனர்.
இலங்கை ஆசியாவின் போதைப் பொருள் மையமாக மாற்றமடைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த அரசாங்கத்தினால் ஏன் போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடிவதில்லை.
ஏனெனில், அரசாங்கம் போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி எடுக்கவில்லை.
போதைப் பொருள் இல்லாதொழிப்பிற்கு ஏன படையினரை பயன்படுத்த முடியாது.

போதை பொருள் பயன்பாட்டை படையினரைக் கொண்டு தடுக்க முடியும்.

அரசாங்கம் அதனைச் செய்யத் தயாரில்லை. இதன் மூலம் நாட்டில் போதைப் பொருள் வர்த்தகம் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றமை புலனாகின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக