வெள்ளி, 23 மே, 2014

கிளிநொச்சி திருவையாற்றில் இளைஞன் கைது !!!

கிளிநொச்சி திருவையாறு அம்பாள் நகரைச் சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற 19வயது இளைஞன் நேற்று இரவு 8.50 மணியளவில் அவரது வீட்டில் வைத்து ரி.ஜ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

1994ம் ஆண்டு பிறந்த இவர் வன்னியில் போர்க்காலத்தில் சிறிய பள்ளி மாணவனாகவே இருந்துள்ளார்.

இவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் எந்த தொடர்புகளும் இல்லை என உறுதிபட தெரிவிக்கப்படுகின்றது.



நைற்றா எனப்படும் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயின்ற இவர், பின்பு அசோக் லேலண்ட கம்பினியில் படித்துக் கொண்டிருந்த நிலையில் தனது தாயின் பிறந்த நாளுக்காக வீட்டுக்கு வந்தபொழுது ரி.ஜ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக