ஞாயிறு, 24 அக்டோபர், 2010

கைதடி மக்களுக்கான குடிநீர்த்திட்டம் நேற்று அங்குரார்ப்பணம்..!

யாழ்ப்பாணம், கைதடி மக்களுக்கான குடிநீர்த்திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தென்மராட்சி கைதடி மக்களின் நீண்டகால தேவையான குடிநீர்த் திட்டமே நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நேற்றுமாலை கைதடியிலுள்ள நீர்வழங்கல் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டு நீர்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் கைதடி அபிவிருத்திக்குழு செயலாளர் மோகனரூபன், தமது கிராமத்தின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர்வசதியை ஏற்படுத்தித் தந்தமைக்கு கைதடி மக்களின் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா மற்றும் நீர்வழங்கல் பகுதி அதிகாரிகள் ஆகியோருடன் பொதுமக்களும் பங்குகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக