புதன், 21 ஏப்ரல், 2010

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு..!

நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள புதிய உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்றுகாலை சிறீகொத்தாவில் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்றுமாலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நாளையதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொள்வார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொள்வர் எனவும் கூறப்படுகிறது. நாளைய அமர்வில், 7ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவான புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக