புதன், 21 ஏப்ரல், 2010

நாளை அமர்வில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்துகொள்கிறார்..!

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்படுகின்றது. நாளை 7ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவான புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் தோட்டத்துறை அமைச்சருமான டி.எம்.ஜயரட்ன பிரதமராக இன்றுமாலை பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் அலரிமாளிகையில் பதவிப் பிரமாணம் இடம்பெறவிருப்பதாகவும் ஆளும் தரப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அரசியலில் 30 வருடகாலம் அனுபவம் வாய்ந்த டி.எம்.ஜயரட்ன, சிறீலங்கா சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக