திங்கள், 26 ஏப்ரல், 2010

அஜித் ரசிகர்களுக்கு தலைமை மன்றம் எச்சரிக்கை..!!

அஜித் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது வேறு யாருமல்ல... அஜித் ரசிகர்கள் தலைமை மன்றம்தான். பிறந்த நாளில் கட்-அட் வைக்க கூடாது, பால் அபிஷேகம் செய்யக்கூடாது என்று சினிமா நட்சத்திரங்களின் தலைமை ரசிகர் மன்றம் கட்டளையிடுவதும், ரசிகர்கள் அதனை மீறி தங்கள் அன்பை வெளிப்படுத்துவதும் வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் டிவி சேனல் ஒன்றுக்காக அஜித் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாட திட்டமிட்ட ரசிகர்களைத்தான் அஜித் ரசிகர்கள் தலைமை மன்றம் எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக அஜித்தின் மேனேஜரும் ரசிகர்கள் மன்ற நிர்வாகியுளான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருகிற மே 1ம்தேதி அஜீத்குமாரின் பிறந்த நாள். இந்த நாளை முன்கூட்டியே, அதாவது ஏப்ரல் 25ம்தேதி கொண்டாட சில ரசிகர்கள் முடிவு செய்து, டிவி சானல்களில் ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறோம். இது தலைமை மன்றத்தின் கட்டளைக்கு எதிரானது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை உடனே நிறுத்தும்படி இந்த அறிக்கை மூலம் அறிவிக்கிறோம். அஜீத் அவர்களுடன் கலந்து பேசி மற்ற விபரங்கள் அறிவிக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக