திங்கள், 26 ஏப்ரல், 2010

அனைத்து ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதாக ஊடகப் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவிப்பு..!!

நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் தான் பாதுகாப்பதாக தகவல் மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடக செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சுதந்திரம் காணப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வத்தளை ஹெந்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒழுக்கமான ஊடகத்துறையை அமைப்பதே தனது நோக்கமெனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக