ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

நிலாவெளி கடலில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

திருமலை நிலாவெளி பகுதி கடலில் நீராடச் சென்றிருந்த பத்துவயதுச் சிறுவன் பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சிறுவன் நீராடிக் கொண்டிருந்த நிலையில் படகொன்றினால் மோதுண்டே உயிரிழந்திருப்பதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த சிறுவன் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மொனறாகலை மாவட்டம் வெல்லவாய மொனறாகலை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பவுசர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக