வியாழன், 29 ஏப்ரல், 2010

யாழில் நகைகளை அபகரிக்க முயன்ற தென்னக சிங்கள யுவதி பிடிப்பட்டார்..!!

யாழ்ப்பாணம் முத்திரைச்சந்திப் பகுதியில் நேற்று காலைவேளை வயோதிபப் பெண் ஒருவரிடம் தங்கநகைகள் அபகரிக்க முற்பட்ட தென்பகுதியை சேர்ந்த இளம்பெண் பாதுகாப்பு படைப்பிரிவினரால் பிடிப்பட்டார். யாழ்ப்பாண நகர் சென்றுவிட்டு பஸ்ஸில் முத்திரைச் சந்தியில் இறங்கி தனது வீடு நோக்கி 60வயது மதிக்கதக்க மேற்படி வயோதிபப்பெண் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்து வந்த நாகரீகமாக உடையணிந்த மூன்று யுவதிகள் அவரது நகைகளை அறுத்துக் கொண்டு ஓட முற்பட்டு;ள்ளனர். வயோதிபமாது கூக்குரல் எழுப்பவே அப்பகுதியில் கடமையில் இருந்த பாதுகாப்பு படையினர் ஒரு யுவதியை பிடித்துள்ளனர் ஏனைய இருவரும் தப்பியோடி விட்டனர் பிடிக்கப்பட்ட யுவதியை படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் விசாரணையின் போது குறிப்பிட்ட பெண் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தினர் என்பது தெரிய வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக