வியாழன், 29 ஏப்ரல், 2010

17வது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் - ஐ.தே.கட்சி பிரதித்தலைவர்..!!

17வது திருத்தச்சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் கருஜயசூரிய தெரிவித்தள்ளார் 17வது திருத்தச்சட்ட த்தை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை பேணிப்பாதுகாக்கமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார் கடந்த காலங்களில் சில துறைகளில் காணப்பட்ட அரசியல் தலையீடு பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிகோரியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்; 2005ம் ஆண்டின் பின்னர் 17வது திருத்தச்சட்ட மூலம் நாட்டில்அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார் மேலும் நாட்டின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சி பூரண ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக