ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

அழைப்பு விடுக்கப்பட்டால் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் -சம்பந்தன் எம்பி..!

அழைப்பு விடுக்கப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக் கூடிய சாத்தியங்களை முழுமையாக மறுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்களை பெற்றுக் கொடுக்ககூடிய எந்தவொரு தீர்வுத்திட்டத்தையும் தமது கட்சி எதிர்க்காது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பிலான மக்கள் அதிருப்தி காரணமாகவே அநேகமானோர் வாக்களிக்க தவறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை எதிர்வரும் பாராளுமன்றில் மூன்றாவது பெரும்பான்மை பலமுடைய கட்சியாக தமது கட்சி திகழும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பாள்மையை பல கோரிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என அவர் குறி;ப்பிட்டுள்ளார். தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உயர்பாதுகாப்பு வலயங்கள் நிறுவப்பட்டுள்ள காரணத்தினால் 1லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழ்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக