வியாழன், 8 ஏப்ரல், 2010
இடம்பெயர்ந்தோர் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் வாக்களிப்பில்..!
வன்னித் தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத் தமிழ் மகாவித்தியாலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களித்து வருகின்றனர். வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிகளவான இடம்பெயர்ந்த மக்கள் வாக்களித்து வருவதாக வவுனியாவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. செட்டிகுளத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.வவுனியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, வவுனியாவில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுவருவதாக வவுனியாச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக