சனி, 17 ஏப்ரல், 2010

ஊடகவியலாளர் சுசில் கிந்தல்பிட்டியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ஊடகவியலாளர் சுசில் கிந்தல்பிட்டிய எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே கிந்தல்பிட்டிய உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சந்தேகநபர்கள் மூவரும் பயணித்த வாகனத்திலிருந்து குறித்த துப்பாக்கியை கைப்பற்றியதாக நீதிமன்றில் பொலீசார் தெரிவித்தனர். ஆனால் கிந்தல்பிட்டிய பயணித்த வாகனத்திற்குள் துப்பாக்கி எவ்வாறு வந்ததென்பதில் சந்தேகம் நிலவுவதாக கிந்தல்பிட்டியவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வழக்கு எதிர்வரும் 22ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக