சனி, 17 ஏப்ரல், 2010

பிரபாகரனின் தாயார் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு, உடன் நாடு கடத்தப்பட்டார்..!

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மலேஷியாவிலிருந்து சென்னை விமான நிலையம் சென்றடைந்த பிரபாகரனின் தாயார் உடனடியாக நாடுகடத்தப்பட்டதாக தமிழக பொலீஸார் தெரிவித்துள்ளனர். சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றின் அனுமதிப்பதற்காக அழைத்துவரப்பட்ட பார்வதி விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்னரேயே திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பி.நெடுமாறன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சமூகமளித்திருந்தததாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக