சனி, 17 ஏப்ரல், 2010

திருமலை பஸ் போக்குவரத்துச் சாலையில் பஸ்ஸிற்கு கீழ் நித்திரை கொண்டவர் பரிதாப மரணம்..!

திருமலை பஸ் போக்குவரத்துச் சாலையில் பஸ்ஸிற்கு கீழ் நித்திரை கொண்டவர் பஸ்சினுடைய சில்லில் சிக்குண்டு உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இறந்தவரின் சடலம் திருமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேர காலத்துடன் யாழ்ப்பாணம் செல்வதற்கென முன்கூட்டியே வந்து பஸ்சின் கீழே படுத்து உறங்கியிருந்த 5பிள்ளைகளின் தந்தையான 37வயதான லூயிஷ் என்கிற சாரதியே உயிரிழந்தவராவார். குறித்த பஸ்சினை இயக்கிய சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக