ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்றம் செல்ல பாதுகாப்பமைச்சின் அனுமதி அவசியமில்லை -ஜே.வி.பி

ஜனநாயக தேசிய முன்னணித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு பாதுகாப்பமைச்சின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்றத்திற்கான முதல் அமர்வில் கலந்து கொள்வதற்கு பாதுகாப்பமைச்சின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார். எனினும், தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் ஜெனரல் சரத் பென்சேகாவின் பெயரையும் வர்த்தமானியில் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக