வியாழன், 22 ஏப்ரல், 2010

இலங்கையர்கள் உட்பட 46சட்டவிரோத குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவில் மீட்பு..!

இலங்கையர்கள் சிலர் உட்பட ஆப்கானியர்கள் என நம்பப்படும் 46சட்டவிரோத குடியேற்றவாசிகள் நேற்று முன்தினம் இரவு அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளதாகவும் இவர்களுடன் இரண்டு படகோட்டிகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் அஸவ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியக் கரையோரக் காவல்படையினர் இவர்களை மீட்டு தற்போது கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுளளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசு இந்த மாத முற்பகுதியல் கொண்டுவந்துள்ள கொள்கை மாற்றத்தின்படி குறித்த 46பேருக்கு மூன்று மாதகாலப் பகுதிக்குப் பின்னரே தமக்கான அகதி அந்தஸ்தைக் கோரமுடியுமென்று அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் பிரண்டன் ஒக்கோனர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக