வெள்ளி, 26 மார்ச், 2010

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான வேட்பாளர்கள் மல்லாவி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம்..!!

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்) ஆகியோர் இன்றுமுற்பகல் மல்லாவி, பாண்டியன்குளம், ஐயன்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களிலும் புளொட் வேட்பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். இதன்போது உரையாற்றிய புளொட் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டிருக்கும் நிலையில் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் தீர்க்கப்படாதுள்ளன. அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்தும் இம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குமான முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம். எமது பணிகளைத் தொடர்வதற்கு உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் இன்று மிகவும் அவசியத் தேவையாகவுள்ளது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு நீங்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக