வெள்ளி, 26 மார்ச், 2010

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவு..!

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவடைவதாகவும் நேற்றைய வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்களிப்பு இன்றும் நடைபெறுவதுடன் , இம்முறை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப் பித்திருந்தனர். முப்படையினர் பொலிஸார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள் தபால்மூல வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். வாக்களிப்பை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக