சனி, 27 மார்ச், 2010

செட்டிகுளம் மெனிக்பாம் முகாமிலிருந்த 1150பேர் கிளிநொச்சி கரைச்சி பகுதியில் மீள்குடியேற்றம்..!

இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து இன்றையதினம் 1150பேர் தமது சொந்த இடங்களுக்குச் சென்று மீள்குடியமர்ந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இன்றையதினம் மீள்குடியேறியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருக்கும் மேலும் ஒருதொகுதி இடம்பெயர்ந்த மக்கள் நாளையதினம் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக