சனி, 6 மார்ச், 2010

நிதி, நேர்மை, நியாயத்தை நிலைநாட்ட நாடு முழுக்க பிரச்சாரம் செய்வேன். அனோமா..!!

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரான சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்கா முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்காக நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் என அவரது மனைவி அனோமா தெரிவித்துள்ளார். எனது கணவரால் மக்களுக்கு உரையாற்ற முடியாது போனாலும் அவர் நாட்டு மக்களின் நலனில் அக்கறைகொண்டுள்ளதாகவும், அவர் சார்பாக வடகிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் இடம்பெறும் பிரச்சாரங்களில் பங்குகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் நீதி, நேர்மை மற்றும் நியாயத்தை நாட்டில் நிலைநாட்டும் நோக்கில் தாம் செயல்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக