சனி, 27 மார்ச், 2010

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்க திருமதி மங்கையர்கரசி இலங்கை வர இணக்கம்..!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்ள திருமதி மங்கையர்கரசி இலங்கை வர இணக்கம் தெரிவித்துள்ளார் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் துணைவியார் திருமதி மங்கையங்கரசி அமிர்தலிங்கம் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நடைபெறும் பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார். லண்டனில் வசித்துவரும் இவர் உதயசூரியனின் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து வடக்கே யாழ் நகரிலும் வன்னியில் வவுனியாவிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவார். அடுத்த சில தினங்களில் லண்டனிலிருந்து இலங்கைவரும் திருமதி அமிர்தலிங்கம் முதலில் யாழ்நகருக்கு செல்லவுள்ளார் என கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய அமைதிப்படை வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்தபோது கொழும்பில் வைத்து அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் திருமதி அமிர்தலிங்கம் லண்டனுக்கு சென்றிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக