சனி, 27 மார்ச், 2010

முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பம்-அரசஅதிபர் இமெல்டா சுகுமார்..!

முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசஅதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மோதல்களின்போது முல்லைத்தீவு நகரைவிட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 16பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90சதவீதமான மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்துவரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக