ஞாயிறு, 28 மார்ச், 2010

புலிகளின் பாணி.. வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர் வவுனியா, சாந்தசோலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர். இச்சம்பவம் நேற்றிரவு வவுனியா குருமண்காடு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. இவரைத் தாக்கியதன் பின்னர் ஜெயராஜ் என்கிற குரு, நாம் இவரை அடித்துப் போட்டிருக்கிறோம். முடிந்தால் அம்புலன்ஸ்சுக்கு போன் பண்ணி காப்பாற்றுங்கள் என்று அயலில் காணப்பட்ட வீடுகளில் தெரிவித்துச் சென்றுள்ளார். உயிரிழந்தவருக்கு இன்று (பிறந்தநாள்) 25வயதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட பிரச்சினையா? அல்லது அரசியல் பிரச்சினையா? என்பது இதுவரை தெரியவரவில்லை. எனினும் புலிகளைப் போன்று ஈ.பி.டி.பியினரும் வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக