சனி, 13 மார்ச், 2010

அவுஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவிலிருந்து இலங்கையர்களை நாடுகடத்தும் பணிகள் ஆரம்பம்..!

அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவிலிருந்து இலங்கை தமிழர்களை இலங்கைக்கே நாடுகடத்தும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் 3தமிழர்களை கிறிஸ்மஸ் தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கிறிஸ்மஸ்தீவில் தொடர்ந்தும் அகதிகளை வைத்திருப்பதன்மூலம் அவுஸ்திலேயாவுக்குள் சட்டவிரோத குடியேறிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தே அவுஸ்திரேலியா இம்முடிவை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை மற்றும் ஆப்கான் அகதிகளுக்கான சர்வதேச பாதுகாப்பு வழிகாட்டி தொடர்பாக மீள ஆராயப்போவதாக தெரிவித்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த முடிவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து சென்றவர்களை விசாரணை செய்தபோது மேலும் பலர் வரத் தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியாவில் தெரிவித்துள்ளமையும் இந்த தீர்மானத்தை எடுப்பதற்கான காரணங்களில் ஒன்றாகுமென்றும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக