சனி, 24 அக்டோபர், 2009

கப்டன் அலி விவகாரம் முடிவுக்கு வந்தது. பொருட்கள் வவுனியாவைச் சென்றடைந்தன.

புலம் பெயர் தமிழ் மக்களினால் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட கப்டன் அலி எனும் நிவாரணக் கப்பலில் உள்ள பொருட்கள் 5 மாத கால தாமதத்தின் பின்னர் நேற்று வவுனியா சென்றடைந்தது. நீண்ட நாட்கள் கொழும்பு மற்றும் இந்திய துறைமுகங்களில் தேங்கிக் கிடந்த இப்பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பாரமெடுத்துள்ளனர். இக்கப்பலில் கொண்டுவரப்பட்ட 884 மெற்றிக்தொன் பொருட்களும் ஐ.சி.ஆர்.சி இனரால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக