சனி, 13 மார்ச், 2010

முன்னாள் புலி உறுப்பினர்களின் மீள்வாழ்விற்கு யுஎஸ் எய்ட் அமைப்பு உதவமுன்வந்துள்ளது...!

முன்னாள் புலிகளின் உறுப்பினர்களாக செயற்பட்டு வந்தவர்களை வழமையான வாழ்கையை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் யு எஸ் எய்ட் அமைப்பு உதவ முன்வந்துள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்களாகச் செயற்பட்ட 550 ற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவ இந்த அமைப்பு முன்வந்துள்ளது. விவசாயம் மீன்பிடி துறையில் ஈடுப்படும் இவர்களுக்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள் இயந்திர சாதனங்கள் உட்பட பல அடிப்படை உபகரணங்களை யுஎஸ் எய்ட் வழங்கும் என அதன் வதிவிட இயக்குநர் தெரிவித்துள்ளார். யுஎஸ் எய்ட் அமைப்பும் புனருத்தாபன ஆணையாளர் நாயகமும் இணைந்து இந்த திட்டத்தை ஒருங்கிணைப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலும் ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களின் நலன்களை பேணும் நோக்கில் பல திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பான நிகழ்வொன்றில் உரையாற்றிய வதிவிட இயக்குநர் அவர்களுக்கு பல உபகரணங்களை நேரடியாக கையளித்தார். இதேபோன்ற செயற் திட்டத்தை வட மாகாணத்தில் விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளதாக யுஎஸ் எய்ட் இன் வதிவிட இயக்குநர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக