புதன், 17 மார்ச், 2010

கிளிநொச்சி மாவட்டத்தில் 1500 குடும்பங்களை இம்மாதம் மீளக்குடியமர்த்த அரசு தீர்மானம்.!

கிளிநொச்சி மாவட்டத்தில் மிதிவெடியகற்றப்பட்டு வரும் பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்மாதத்தில் 1500ற்கு மேற்பட்ட குடும்பங்களை மீள்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார். நாளை மறுதினம் 19 ஆம் திகதி A-9 கிழக்குப் பிரதேச கிராமங்களில் 350 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதுடன், இம்மாதத்தில் ஐந்து கட்டங்களாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் A-9 வீதிக்கு மேற்குப்புறமாகவுள்ள உமையாள்புரம், குமாரபுரம், பரந்தன் கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் 19 ஆம் திகதி முரசுமோட்டை, கோரக்கன் கட்டு கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக